16th March 2024 15:39:08 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே ஆர்டபீள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2024 மார்ச் 13 ஆம் திகதி தீகவாபி தூபியில் வைக்கப்படவுள்ள சர்வ சாஸ்த்ர நினைவுச்சின்னங்களின் நாடளாவிய ரீதியிலான கண்காட்சி பயணத்தை 21 வது காலாட் படைப்பிரிவு படையினர் பக்தி பூர்வமாக வரவேற்றனர்.
கலாஓயா பிரதேசத்திற்கு அருகாமையில் இந்த சுற்றுப்பயணம் வரவேற்கப்பட்டு ஊர்வலமாக வெஹெரகல பௌத்த விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் படைப்பிரிவின் தளபதி, பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். மேலும், 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 03 அதிகாரிகள் மற்றும் 50 சிப்பாய்கள் இந்த ஊர்வலத்தில் பங்கு கொண்டனர்.