15th March 2024 15:04:40 Hours
இராணுவத் வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.டி.சீ மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் சமீபத்தில் 2024 மார்ச் 08 முதல் 10 வரை நிர்வாக விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி, வன்னி – வழங்கல் கட்டளை, கிழக்கு வழங்கல் கட்டளை மற்றும் முல்லைத்தீவு இராணுவக் கள வைத்தியசாலை ஆகியவற்றிக்கு விஜயம் செய்தார்.
முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தளபதி மற்றும் அந்தந்த அமைப்புக்களின் சிரேஸ்ட அதிகாரிகளால் வழங்கல் கட்டளை தளபதி அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர், அவர் ஒவ்வொரு இடத்திலும் குழு படங்கள் எடுத்துக் கொண்டதுடன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக் குறிப்புகளையும் பதிவிட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.