14th March 2024 15:55:48 Hours
இராணுவ வழங்கல் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.டி.சி. மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 28 பெப்ரவரி 2024 அன்று இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி தலைமையகத்திற்கு படையினரின் நலன்புரி விடயங்கள் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் பொருட்டு விஜயம் செய்தார்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி நிலையத் தளபதி செயல்பாடுகள் குறித்த விரிவான விளக்கத்தை வழங்கினார். இதன் போது இராணுவ வழங்கல் கட்டளைத் தளபதி இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் தற்போதைய நிர்வாகச் சிக்கல்களைச் சீர்செய்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இறுதியாக வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி முகாம் வளாகத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில எண்ணங்களை பதிவிட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.