14th March 2024 14:26:57 Hours
சீன மக்கள் குடியரசின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சாங் பாகுன் தலைமையிலான சீனப் பிரதிநிதிகள் 08 மார்ச் 2024 அன்று சமிஞ்சைப் படையணி பாடசாலைக்கு விஜயம் செய்தனர்.
பிரதான சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐ.எச்.எம்.ஆர்.கே. ஹேரத் ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் தூதுக்குழுவை அதிகாரிகள் உணவகத்தில் அன்புடன் வரவேற்றார். தொடர்ந்து, இலங்கை சமிக்ஞைப் படையணி பயிற்சி பாடசாலையின் பிரதம பயிற்றுவிப்பாளர் மேஜர் எம்.எம்.யு.ஐ.பி. வெவகெதர பீஎஸ்சீ பாடசாலையில் நடத்தப்படும் பயிற்சி குறித்து விளக்கமளித்தார். பின்னர், சீன இராணுவத்தின் உள்ளீடுகளுடன் பாடசாலையின் முன்னேற்றத்திற்கான சாத்தியமான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.
அதன்பின், கம்பி வழி தொடர்பாடல் மற்றும் பைபர் ஆய்வகங்கள் உட்பட வளாகத்தில் உள்ள பயிற்சி இடங்களை பிரதிநிதிகள் பார்வையிட்டனர், அங்கு மாணவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் செயல்விளக்கம் வழங்கப்பட்டது. குழு படம் எடுத்தல் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையிலான நல்லுறவை அடையாளப்படுத்தும் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றம் என்பன இடம்பெற்றன.
புறப்படுவதற்கு முன், மேஜர் ஜெனரல் ஜாங் பாகுன் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் பங்குபற்றினர்.