Header

Sri Lanka Army

Defender of the Nation

14th March 2024 14:24:40 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி படையினருக்கு உரை

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் 2024 மார்ச் 06 - 07 ம் திகதிகளில் 19 வது இலங்கை தேசியக் பாதுகாவலர் படையணி, 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை ரைபிள் படையணி ஆகியவற்றிற்கு படையினரின் நலம் விசாரிக்கும் நிமித்தம் விஜயம் செய்தார்.

ஒவ்வொரு படையணிக்கும் வருகை தந்ததை சிரேஷ்ட அதிகாரியை படையலகுகளின் கட்டளை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டன.

பின்னர் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் மரக்கன்று நட்டுவைத்தார். மேலும் ஒவ்வொரு இடத்திலும் முகாம்களை பார்வையிட்ட அவர். அனைவருடன் குழு படமும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிக்கு சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன, மேலும் அவர் ஒவ்வொரு படையலகுகளின் அதிதிகள் பதிவேட்டில் தனது கருத்துக்களையும் பதிவிட்டார்.

இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.