13th March 2024 09:19:58 Hours
ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவரும், விஜயபாகு காலாட் படையணியின் சிரேஷ்ட படைவீரர்களின் ஒருவருமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் 12 மார்ச் 2024 ம் திகதி சந்தித்தார்
இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 35 ஆண்டுகளுக்கும் மேலான அவரின் சேவைக்கும் தகுதியான புதிய நியமனத்திற்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்ட இராணுவ தளபதி ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரியின் இராணுவத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவுகூர்ந்தார். மேலும், மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் ரணவிரு சேவா அதிகார சபையின் செயல்பாடு மற்றும் அதன் பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற, ஊனமுற்றோர் மற்றும் பணியில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் மற்றும் நல்வாழ்வை மேலும் மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவரை இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.
மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் ரணவிரு சேவா அதிகார சபையின் 10வது தலைவராக 02 பெப்ரவரி 2024 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கலந்துரையாடலின் முடிவில் இராணுவத் தளபதி அவர்கள் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.