11th March 2024 17:47:58 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 2024 மார்ச் 08 ஆம் திகதி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வீதியோரங்களில் ‘புளிய மர கன்றுனளை நடும் திட்டத்தை யாழ் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்தனர்.
யாழ்.மாவட்டச் செயலாளர் திரு.ஏ.சிவபாலசுந்தரன் அவர்கள் ஓய்வுபெறும் தினத்தில் பிரதம அதிதியாகக் பிரதேச செயலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்களுடன் கலந்து சிறப்பித்தார். திரு. ஏ.சிவபாலசுந்தரன் மற்றும் யாழ் தளபதி ஆகியோர் நிகழ்வின் அடையாளமாக புளியம் கன்றினை நட்டு குழு படம் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்வில் யாழ் தளபதி புளிய மரங்களின் இயற்கையான தென்றலை எதிர்கால சந்ததியினர் பெறுவதற்கு இத்திட்டம் கட்டுவான் வரை தொடரப்படும் என உறுதியளித்தார். மேலும், திரு.ஏ.சிவபாலசுந்தரனுக்கு சிறப்புப் பாராட்டு மடல் யாழ் தளபதியினால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.