10th March 2024 10:25:50 Hours
121 வது காலாட் பிரிகேட் மற்றும் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் 2024 மார்ச் 05 ஆம் திகதி செல்ல கதிர்காமத்திலிருந்து இருந்து கோனகனார பகுதி வரையிலான கதிர்காமம் - புத்தல வீதியின் இருபுறமும் சுத்தப்படுத்துவதற்கான சிரமதானப் பணியை மேற்கெண்டனர்.
பயணிகளால் வன விலங்குகளுக்கு உணவளிப்பதன் மூலம் அங்கு நிறைந்துள்ள மாசுக்களை அகற்றும் நோக்கத்துடன் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ்.முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
121 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டதுடன், பிரதேசத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வனவிலங்கு அலுவலக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.