10th March 2024 10:23:01 Hours
532 வது காலாட் பிரிகேடின் 14 வது ஆண்டு நிறைவு விழாவை 532 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் விக்கிரமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 2024 மார்ச் 04 ஆம் திகதி சந்துன்புர பிரிகேட் வளாகத்தில் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியின் ஆரம்பமாக தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்தைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை தளபதி நட்டு வைத்ததுடன், அனைத்து நிலையினருடனான மதிய உணவின் போது படையினருடன் கலந்துரையாடினார்.
மாலையில், படையினர் வீரமரணமடைந்த போர்வீரர்களுக்கும் சேவை செய்த, காயமடைந்த மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் வகையில் போதி பூஜையையும் நடாத்தினர். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.