06th March 2024 19:04:40 Hours
கட்டுபெத்தவில் அமைந்துள்ள இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தள பட்டறையின் 31 வது ஆண்டு நிறைவை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தள பட்டறை தளபதி கேணல் ஆர்சீ ஜயதுங்க அவர்களின வழிகாட்டுதலின் கீழ் 2024 மார்ச் 01 அன்று மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கட்டுபெத்த இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தள பட்டறையில் கொண்டப்பட்டது.
ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராணுவ வீரர்கள் போதிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆண்டு நிறைவு நாளில் இராணுவ மரபுகளின்படி தளபதிக்கு சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் தளபதி அவர்கள் வளாகத்தில் மரக்கன்றினை நாட்டினார். அதனை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான ஒன்றுகூடலின் போது படையினர் உரையாற்றினார்.