06th March 2024 19:11:29 Hours
6 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் 04 மார்ச் 2024 அன்று தாகொன்ன ரணசிங்க ஆரம்பப் பாடசாலையின் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் மினுவாங்கொடை தாகொன்னவில் வசிக்கும் கிராம மக்களுக்கு மூக்குகண்ணாடிகளையும் வழங்கும் சமூக செயற்றிட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
6 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜீஆர்ஆர்கேஎஸ் ஜயரத்ன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் ஒருங்கினைப்பின் கீழ் நன்கொடையளர்கள் இந் நிகழ்வுக்கு நிதியளித்தனர். இந்நிகழ்வின் போது, தாகொன்ன ரணசிங்க ஆரம்பப் பாடசாலையின் 36 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும், பார்வை குறைபாடுள்ள கிராம மக்களுக்கு 60 மூக்குகண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக 141 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்ஆர் த எஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்கள் கலந்துகொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில்கலந்து கொண்டனர்.