Header

Sri Lanka Army

Defender of the Nation

06th March 2024 20:17:19 Hours

லான்ஸ் கோப்ரல் எச்.ஏ.எப் பிரபாத்தின் வீர செயலுக்கு இராணுவத் தளபதியால் கௌரவிப்பு

4 வது விசேட படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எச்.ஏ.ப் பிரபாத், அவர்கள் 2024 மார்ச் 6 ஆம் திகதி 'தளபதி பாராட்டுப் சின்னத்தை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களிடமிருந்துப் பெற்றுகொண்டார்.

15 பெப்ரவரி 2024 அன்று விடுமுறையில் இருந்த லான்ஸ் கோப்ரல் எச்எஎப் பிரபாத், தலவாக்கலை சுமண வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவரை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றினார். அவரின் இந்த தன்னலமற்ற செயலால் சரியான நேரத்தில் ஒரு இளம் உயிர் காப்பாற்றப்பட்டது.

இராணுவத் தளபதி சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததோடு, அந்த வீரருடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார். உரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி லான்ஸ் கோப்ரல் எச்.ஏ.எப் பிரபாத் அவர்களின் துணிச்சலான செயலை மிகவும் பாராட்டி அவருக்கு எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

விசேட படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பி.சி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, மற்றும் 4 வது விசேட படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஆர்எஎஸ்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.