05th March 2024 14:06:21 Hours
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு 02 மார்ச் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானி அவர்களை வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் அன்புடன் வரவேற்றதனை தொடர்ந்து படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இவ்விஜயத்தின் போது இராணுவ பதவி நிலை பிரதானி மறைந்த இராணுவ வீர்ர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியதுடன் படையினருக்கு ஆற்றிய உரையின் போது இலங்கை இராணுவம் மற்றும் வன்னி பாதுகாப்பு படை படையினர் ஆற்றிய பாராட்டத்தக்க பாத்திரம் மற்றும் பணிகளை அங்கீகரித்து நன்றி தெரிவித்தார். பாதாள உலகச் செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல், படையலகுகள் மற்றும் ஏனைய பயிற்சி அமைப்புக்களின் முக்கியத்துவம், சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபாடு, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக பாவனை, பணிப் பாதுகாப்பு மற்றும் இராணுவத்தின் மூலம் பெறப்பட்ட நலன்புரி வசதிகள் போன்ற நிலைமைகளை அவர் எடுத்துக் காட்டினார்.
அவர் தனது உரையில், இந்த வாய்ப்பை வழங்கிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்ததுடன், நிகழ்வை ஏற்பாடு செய்த வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் முயற்சிகளையும் பாராட்டினார்.
உரையின் முடிவில், வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி, பிரதம அதிதிக்கு சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கினார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தின் போது படையினருடன் இராணுவ பதவி நிலை பிரதானி உரையாடியதுடன், வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டியதுடன், வன்னி பாதுகாப்பு படை தலைமையக படையினருடன் சில குழு படங்களையும் எடுத்துகொண்டார். புறப்படுவதற்கு முன், இராணுவ பதவி நிலை பிரதானி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
இந்த நிகழ்வின் போது வன்னி படைப்பிரிவு தளபதிகள், வன்னி முன்னரங்க பராமரிப்புப் பகுதி தளபதி, பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.