29th February 2024 18:41:45 Hours
கனிஷ்ட தலைமைத்துவ மற்றும் தொழில் அபிவிருத்தி பாடநெறி -54 ஆனது 2024 பெப்ரவரி 28 அன்று அம்பாறை காலாட் படை பயிற்சி பாடசாலையில் நிறைவு பெற்றது. பல்வேறு படையணிகளை சேர்ந்த 77 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இப்பாடநெறியில் பங்கேற்றனர்.
2024 ஜனவரி 31 அன்று ஆரம்பமாகி ஒரு மாத கால பாடநெறி கோட்பாட்டு மற்றும் செயன்முறை பயிற்சி தொகுதிகளை உள்ளடக்கியது. இலங்கை பீரங்கி படையணியின் பொம்பொடியர் எச்எஸ்பீ ஜயவீக்ரம பாடநெறியில் முதல் நிலையை பெற்றார்.
காலாட் படை பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நிறைவுரை ஆற்றினார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.