16th April 2026
ஜெர்மன் விமானப்படையின் லெப்டினன் கேணல் பிராங்க் விர்த்ஸ் மற்றும் கெப்டன் நில்ஸ் நார்விக் ஆகியோர், 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
13 உறுப்பினர்களைக் கொண்ட ஜெர்மானிய விமானப்படைத் பிரதிநிதிகள் குழு, முப்படைகளின் பணியாளர்களுக்காக, மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் குறித்த விழிப்புணர்வை மையமாகக் கொண்ட, 'பகைமையான சூழலில் ரோந்து/வாகன அணிவகுப்பு' தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பணி நோக்குநிலை பாடநெறியை 2026 ஏப்ரல் 20 முதல் 2026 மே 14 ஆம் திகதி வரை இலங்கை குக்குலேகங்க அமைதி காக்கும் ஆதரவு நடவடிக்கைகள் பயிற்சி நிறுவனம் மற்றும் மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலை ஆகிய இடங்களில் நடாத்த திட்டமிட்டுள்ளது.