7th January 2025
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களின் உணவகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாப்பாட்டு மண்டபம் 03 ஜனவரி 2025 படையணி தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் வைகஎஸ் ரங்கிக பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த திறப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.