17th February 2025
லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் 15 வது இலங்கைப் படை குழுவின் சிறப்புமிக்க பதக்க வழங்கும் நிகழ்வு 2025 பெப்ரவரி 11 அன்று லெபனான் நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கைப் படையினரின் சிறப்பான அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது. மேலும் படையினருக்கு அவர்களின் சேவைக்காக ஐ.நா பதக்கங்கள் வழங்கப்பட்டன.
லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் சீ.பி தக்கல் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் கௌரவ திரு. கே.எஸ். ஜயவீர, லெபனான் இராணுவபடைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.ஏ ஹெட்டிகே ஆகியோர் கலந்து கொண்டனர்.