13th March 2026
தென் சூடான் போரில் ஐ.நா அமைதி காக்கும் பணியின் இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்றிய 11வது குழுவில் 10 அதிகாரிகள் மற்றும் 41 சிப்பாய்கள் உள்ளடங்குவர். அவர்கள் ஒரு வருட கால பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து 2026 மார்ச் 11 அன்று இலங்கைக்கு திரும்பினர். இதற்கிடையில், மீதமுள்ள 05 அதிகாரிகள் மற்றும் 04 சிப்பாய்கள் தென்சூடானில் பின்தளக் குழுவாக தென் சூடானிலேயே தங்கியுள்ளதுடன், அவர்கள் விரைவில் இலங்கைக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகை தந்த தென் சூடான் ஐ.நா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்றிய 11வது குழுவின் படையினரை, வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.பீ. விக்ரமசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ். விஜேசிறிவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, இலங்கை இராணுவ வைத்திய படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் கே.ஜே. ரணவீர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றனர்.
அவர்களின் ஒரு வருட பணிக்காலத்தில், இலங்கை இராணுவ வைத்திய படை படையினர் நிலை-2 வைத்தியசாலையில் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதில் உறுதியாக இருந்தனர். நோயாளர் பாதுகாப்பு மற்றும் பயனுள்ள வைத்திய பராமரிப்புக்கு வலுவான முக்கியத்துவத்துடன், ஐ.நா சுகாதாரத் தரங்கள் மற்றும் தரத்தைப் பராமரிப்பதில் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.