21st March 2026
மறைந்த பிரிகேடியர் ஜே.எப். ஹலங்கொட அவர்களை கௌரவிக்கும் வகையில் ஆரம்ப சொற்பொழிவு 2026 பெப்ரவரி 21 அன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி பட்டபடிப்பு பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி.ஏ. ஜயசேகர (ஓய்வு) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
பிரதம விருந்தினரை, 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேயவர்தன அவர்கள் வரவேற்றார்.
பிரதம விருந்தினர் மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்களால் பிரிகேடியர் ஹலாங்கொடயின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவு உரையை நிகழ்த்துவதற்கு முன்பு மேஜர் ஜெனரல் லலின் பெர்னாண்டோ (ஓய்வு) அவர்களுக்கு சொற்பொழிவு பதக்கம் வழங்கப்பட்டது. இதன் போது அவர் மறைந்த பிரிகேடியரின் சிறப்புமிக்க சேவை, தலைமைத்துவம் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் படைப்பிரிவு மரபுகளுக்கான பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜி.எச். டி சில்வா (ஓய்வு), கெமுனு ஹேவா படையணியின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கையில் ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான கேணல் கீத் மைல்ஸ் மற்றும் மறைந்த பிரிகேடியரின் குடும்ப உறுப்பினர்கள், அவரது மகன் பிரிகேடியர் எச்.என். ஹலங்கொட (ஓய்வு) மற்றும் மேஜர் ஜெனரல் லலின் பெர்னாண்டோ (ஓய்வு) ஆகியோர் சொற்பொழிவாளராக கலந்து கொண்டனர்.