24th February 2026
இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தினால் 2026 பெப்ரவரி 18 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திலும், 2026 பெப்ரவரி 19 ஆம் திகதி பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்திலும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் கே.ஏ.டி.சி.ஜே. கொடித்துவக்கு அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு உரையாற்றி, நிதியின் பரப்பு மற்றும் நோக்கத்தை விளக்கினார். மேலும், இராணுவத்தினரின் வாழ்க்கைத் தரத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் இந்நிதியின் முக்கிய பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அத்துடன், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறையான செயல்முறைகளை விளக்கி, விரைவான செயலாக்கத்தை உறுதி செய்ய ஆவணங்களில் துல்லியமும் முழுமையும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
கலந்துரையாடல்களின் போது, பொதுவான நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் படையலகு மட்டத்தில் முறையான பதிவு பராமரிப்பின் அவசியம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் மூலம் பங்கேற்பாளர்கள் உறுப்பினர் தொடர்பான விடயங்களில் தெளிவுபடுத்தலைப் பெறுவதுடன், நிதியின் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த தெளிவான புரிதலையும் பெற்றனர்.