படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வு

16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வை 2026 பெப்ரவரி 16 அன்று வெற்றிகரமாக முடித்தது. லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 13 அதிகாரிகள் கொண்ட குழுவால், நகௌராவில் உள்ள ஸ்ரீ முகாமில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் உபகரண ஆய்வுக்குழு, இந்த ஆய்வை எந்த அவதானிப்புகள் அல்லது குறைபாடுகளையும் தெரிவிக்காமல் மிகவும் பாராட்டத்தக்க முடிவுகளுடன் நிறைவு செய்ததுடன் பிரிவின் விதிவிலக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதுடன் இது லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் கீழ் 16 வது இலங்கை பாதுகாப்பு படைக் குழுவின் கடமைகளை ஏற்றுக்கொண்டதிலிருந்து தொடர்ச்சியான மூன்றாவது வெற்றிகரமான ஆய்வகும்.