இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு

78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக 51வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 2026 பெப்ரவரி 04 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு, 51வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையின் யாழ்ப்பாண கிளஸ்டர் மையத்தைச் சேர்ந்த வைத்தியர் கே. ஸ்ரீபாஸ்கரன் மற்றும் அவரது மருத்துவ ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு உதவி வழங்கினர்.

அனைத்து பிரிகேட் மற்றும் படையலகுகளைச் சேர்ந்த 122 பணியாளர்கள் இரத்த தான நிகழ்வில் பங்கேற்றனர்.