மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பாடநெறி எண் 31 நிறைவு

சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் ஏற்பாட்டில், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பாடநெறி எண் 31 (அதிகாரிகள்) இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 நவம்பர் 24 முதல் 2025 டிசம்பர் 23 வரை வெற்றிகரமாக இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 19 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 27 அதிகாரிகள் இந்த பாடநெறியை வெற்றிகரமாக முடித்தனர். படையினரிடையே மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கருத்துக்கள் தொடர்பான விரிவான புரிதலை வளர்ப்பதும், தொழில்முறை அறிவை மேம்படுத்துவதும் இந்த பாடநெறியின் நோக்கமாகும். கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டன. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையின் அதிகாரி பயிற்றுவிப்பாளர்கள், பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஆயுத மற்றும் பாதுகாப்பு திட்ட ஆலோசகர் திரு. சன்ன ஜெயவர்தன ஆகியோர் விரிவுரைகளை வழங்கினர், அவர்கள் தங்கள் நேரத்தையும் நிபுணத்துவத்தையும் இந்த பாடநெறிக்காக அர்ப்பணித்தனர்.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் இறுதி உரையை நிகழ்த்தினார். சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் பணிப்பாளர், இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.