ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இராணுவத் தலைமையக வழங்கல் கட்டளை தளபதியும், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆரச்சி அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆரச்சி அவர்கள் 1991 நவம்பர் 17 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1993 நவம்பர் 22, இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார்.

தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2025 ஜனவரி 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 டிசம்பர் 10 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தலைமையக வழங்கல் கட்டளை தளபதியாகவும், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார்.

மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆரச்சி அவர்கள் தனது பணிக்காலத்தில், 4வது காலாட் பிரிகேட உள்ளக பாதுகாப்பு பிரிவின் குழு தளபதி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தளப் பட்டறையின் (கொழும்பு) பட்டறை அதிகாரி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பணிநிலை அதிகாரி 3, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தளப் பட்டறையின் (உடவலவ) நிறைவேற்று அதிகாரி, கவச பிரிகேட் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி களப் பட்டறையின் அதிகாரி கட்டளை, கவச பிரிகேட் தலைமையக இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி களப் பட்டறையின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 53வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 2 (வழங்கல்), (கட்டுபெத்த மற்றும் உடவலவ), இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி களப் பட்டறையின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 7வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி களப் பட்டறையின் இரண்டாம் கட்டளை அதிகாரி, பீரங்கி பிரிகேட் தலைமையகத்தில் கவச பிரிகேட் தலைமையக இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி களப் பட்டறையின் சிரேஷ்ட பட்டறை அதிகாரி, கவச பிரிகேட் தலைமையக இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி (பிரிகேட்) பதில் கட்டளை அதிகாரி மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்) ஆகிய நியமனங்களை வகித்துள்ளார்.

அவர் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் கேணல் (திட்டம்), இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி (கொழும்பு) களப் பட்டறையின் தளபதி, இராணுவ தொழிற்துறை திட்டத்தின் தளபதி, 58 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் பிரிகேடியர் (நிர்வாகம் மற்றும் குடியிருப்பு), இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நிலைய தளபதி, மத்திய பாதுகாப்புப் படை தலைமையக (மத்திய) முன்னரங்க பராமரிப்பு பிரிவின் பதில் தளபதியாக பதவி வகித்துள்ளதுடன் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மற்றும் இராணுவத் தலைமையகத்தில் வழங்கல் கட்டளையின் தளபதியாக பணியாற்றுகின்றார்.

சிரேஷ்ட அதிகாரி படையலகு நிர்வாகப் பாடநெறி, படையலகு கணக்கியல் அதிகாரிகள் பாடநெறி மற்றும் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்தியா இளம் தொழில்நுட்ப அதிகாரிகள் பாடநெறி, சீனா கவசப் பணியாளர் தொழில் பராமரிப்புத் துறை பாடநெறி, இந்தியா பட்டறை நிறுவனத் தளபதிகள் பாடநெறி மற்றும் இந்தியாவில் சிரேஷ்ட இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் அதிகாரிகள் பாடநெறி உள்ளிட்ட பல வெளிநாட்டு கற்கைகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆரச்சி அவர்கள் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் மனிதபிமான முகாமைத்துவ சான்றிதழையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ முதுமானியையும் பெற்றுள்ளார்.