19th November 2025
கண்டி மாவட்ட சாரணர் கிளை, 17 வது கம்போரியுடன் இணைந்து, 2025 நவம்பர் 16 ஆம் திகதி போகம்பரா மைதானத்தில் குருளை சாரணர் தினத்தை ஏற்பாடு செய்திருந்தது.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.சி.எம்.ஜி.எஸ்.டி கூரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் மொத்தம் 4,500 குருளைச் சாரணர்கள் பங்கேற்றனர்.