2nd November 2025
இலங்கை சிங்க படையணியின் மறைந்த கேணல் ஆர்.ஏ.என்.பீ ரணவீர (ஓய்வு) அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 நவம்பர் 01 அன்று, கொட்டாவை பொது மயானத்தில் இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது.
இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினர், தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பூதவுடலை தாங்கிய பேழை பீரங்கி வண்டியில் வைப்பதற்கு முன்பு மயானத்தின் நுழைவாயிலில் ஆயுத மரியாதை வழங்கினர்.
இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகள் பிரதிநிதிகள் குழு ஒன்று பூதவுடலை தாங்கிய பேழையை முறையாக பெற்றுக்கொண்டு இராணுவ அதிகாரிகள்,குடும்ப உறுப்பினர்களுடன் பேழைக்கு பின்னால் அணிவகுத்து சென்றனர்.
இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வெளியிடப்பட்ட முறையான விசேட கட்டளை பகுதி I கூடியிருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வீரமரணம் அடைந்த அதிகாரிக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இராணுவ மரியாதையான அடையாள துப்பாக்கி மரியாதை செலுத்தப்பட்டது.
புகழ்மிகு வீரர் அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பலுடன் பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வழக்கமான மரியாதை நிமித்தமாக மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் கஜபா படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மறைந்த கேணல் ஆர்.ஏ.என்.பீ ரணவீர (ஓய்வு) அவர்கள் தனது சிறந்த இராணுவ வாழ்க்கையில் பெற்றுக் கொண்ட அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.
மறைந்த சிரேஷ்ட அதிகாரிக்கு அஞ்சலி செலுத்த சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் துயரப்படுவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட கட்டளை பகுதி 1 பின்வருமாறு:
