வெளிச்செல்லும் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு பிரியாவிடை

59 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வை 2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி 59 வது காலாட் படைப்பிரிவில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, அவரது பதவிக்காலத்தின் நிறைவை குறிக்கும் வகையில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில், வெளிச்செல்லும் தளபதி, குழுப்படம் எடுப்பதற்காக அழைக்கப்பட்டார். அனைத்து நிலையினருக்கும் உரையாற்றிய வெளிச்செல்லும் தளபதி, தனது பதவிக் காலத்தில் அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவித்தார்.

அன்றைய தினம் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. வெளிச்செல்லும் தளபதி, அனைத்து நிலையினருடனும் கலந்துரையாடுவதற்கு இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.