59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.எஸ். மில்லகல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி 59 வது காலாட் படைப்பிரிவில் உத்தியோகப்பூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய தளபதிக்கு 10 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 5 வது இலங்கை சிங்க படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர், அவர் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார். உரையில் தனது எதிகால திட்டங்களை தெரிவித்ததுடன், அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர் படைப்பிரிவுக்கான தனது தொலைநோக்கு மற்றும் முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டினார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.