24th October 2025
மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 51 வது காலாட் படைப்பிரிவின் 36 வது தளபதியாக 2025 ஒக்டோபர் 18 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், 14 வது கஜபா படையணியின் படையினரால் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, சிரேஷ்ட அதிகாரி இந்த நிகழ்வின் நினைவாக தலைமையக வளாகத்தில் ஒரு மாமரக்கன்றை நாட்டினார். அதன் பின்னர், படைப்பிரிவின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றிய தளபதி, அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை மீது தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.