14 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் ஆர்.பீ.எஸ். பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 14 வது காலாட் படைப்பிரிவின் 13 வது தளபதியாக 2025 ஒக்டோபர் 18 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.

கடமைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தளபதி படையினருக்கு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.