முதலாம் படையின் 4வது ஆண்டு நிறைவு விழா

முதலாம் படையின் 4 வது ஆண்டு நிறைவு விழா அதன் தலைமையகத்தில் 2025 ஒக்டோபர் 17ஆம் திகதி தொடர் நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னதாக, 2025 ஒக்டோபர் 15 மற்றும் 16 திகதிகளில் கிளிநொச்சி லும்பினி விஹாரை, புனித தெரசா ரோமன் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் முருக்கண்டி இந்து கோவில் ஆகிய இடங்களில் மத வழிப்பாடுகள் நடாத்தப்பட்டன.

ஆண்டு நிறைவு நாளில், 8 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், முதலாம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களுக்கு சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை வழங்கினர். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், அவர் முகாம் வளாகத்தில் ஒரு சந்தன மரக்கன்றை நாட்டினார். அதனைத் தொடர்ந்து குழு படம் எடுத்துகொண்டதுடன் படையினருக்கு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.