பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சநதிப்பு

இலங்கையில் உள்ள ஐக்கிய இராச்சிய தூதரகத்தில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான நியமிக்கப்பட்ட புதிய பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் கீத் மைல்ஸ் அவர்கள் 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கையில் உள்ள ஐக்கிய இராச்சிய தூதரகத்தில் இருந்து வெளிச்செல்லும் பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேரன் வூட்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார்.