4th July 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இலங்கை விமானப் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, விமானப்படைத் தளபதி ஏயர் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூவீ ஆர்எஸ்பீ மற்றும் மூன்று பார்கள் யூஎஸ்பீ எப்என்டியூ (சீனா) பீஎஸ்சி கியூஎச்ஐ அவர்களை (ஜூலை 04, 2025) ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி ஏர் கொமடோர் புத்திக பியசிறி அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து விமானப் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
விஜயத்தின் போது, இராணுவத் தளபதி விமானப்படைத் தளபதியுடன் பரஸ்பர நலன் சார்ந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், இரு தளபதிகளுக்கும் இடையே உத்தியோகபூர்வ நினைவுப் சின்னங்கள் பரிமாறப்பட்டன.
இந்த நிகழ்வில், பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, மற்றும் விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புகைப்படம்: www.airforce.lk