30th June 2025
58 வது காலாட் படைப்பிரிவு படையினரால் வெளிச்செல்லும் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 21 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுடிருந்தது.
அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு, இராணுவ மரபுகளின்படி, பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில், பதவி விலகும் தளபதி குழு படம் எடுப்பதற்கு அழைக்கப்பட்டார். அனைத்து படையினருக்கும் உரையாற்றிய தளபதி, தனது பதவிக்காலத்தில் அனைத்து படையினரும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவித்தார்.
அன்றைய தினம் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துடன் நிறைவடைந்தது இது வெளியேறும் தளபதி அனைத்து நிலையினருடன் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.