29th June 2025
மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கஜபா படையணியின் 15வது படைத்தளபதியாக 2025 ஜூன் 26 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகையின் போது, அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் பின்னர் அவர் கஜபா படையணியின் ஸ்தாபக தந்தையின் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவர் குழு படம் எடுத்துக்கொண்டதுடன் ஒரு மரக்கன்றை நாட்டி மற்றும் அனைத்துப் நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். இறுதியாக அவர் அதிகாரிகள் உணவறையில் அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.