இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானி பதவியேற்பு

இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானியாக (இராணுவத்தில் இரண்டாவது சிரேஷ்ட நியமனம்) 2025 ஜூன் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகப்பூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி போன்ற முக்கிய பதவிகளில் முன்னர் பணியாற்றிய அவர், இந்தப் பதவிக்கு ஏராளமான அனுபவத்தையும் மூலோபாய அறிவையும் கொண்டுள்ளார்.

இந்தப் பணிகளில் அவரது தலைமைத்துவம் அவரது செயல்பாட்டு புத்திசாலித்தனத்தையும் தொழில்முறை சிறப்பையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு, புதிய பதவி நிலை பிரதானிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.