இலங்கை இராணுவத்தினால் நலன்புரித் திட்டம் ஏற்பாடு

சேவையிலுள்ள பணியாளர்கள், ஓய்வுபெற்ற உறுப்பினர்கள் மற்றும் வீரமரணமடைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்வை உறுதி செய்வதோடு, அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஒரு நலத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். வருகை தந்த இராணுவத் தளபதியின் வாகனத் தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியினால் மரியாதயுடன் வரவேற்கப்பட்டார்.

இராணுவ சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, படையினருக்கு உரையாற்றிய தளபதி, இராணுவத்தில் பணியாற்றும், ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் வீரமரணமடைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான இராணுவத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். பின்னர், ஜனாதிபதி செயலகத்தால் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட வாகனத்தின் சாவியை அபிமன்சல 3ற்கு தளபதி உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

பின்னர், இராணுவத் தளபதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கூறவும், முக்கிய விடயங்களைப் பற்றி கலந்துரையாடவும் இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பை வழங்கியது. தொடர்புடைய பணிப்பகங்கள் மற்றும் பிரிவுகளின் பிரதிநிதிகள் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை வழங்க தங்கள் ஒத்துழைப்பை வழங்கினர்.