16th June 2025
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஹமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை பொரளை பொது மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான இராணுவ வீரர்கள், பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தேசத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவித்தனர்.
மறைந்த இராணுவத் தளபதியின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை முறையாக நினைவு கூர்ந்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்.
இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய இலங்கை பீரங்கிப் படையினர், தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பூதவுடலை தாங்கிய பேழையினைதுப்பாக்கி வண்டியில் வைப்பதற்கு முன்பு மயானத்தின் நுழைவாயிலில் ஆயுத மரியாதை வழங்கினர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், இராணுவத்தினர்,குடும்ப உறுப்பினர்களுடன் பேழையினை பின்னால் அணிவகுத்து சென்றனர்.
இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வெளியிடப்பட்ட முறையான விசேட கட்டளை பகுதி I மறைந்த ஜெனரலின் சேவையையும் அவரது சேவைக்கான நாட்டின் நன்றியையும் பிரதிபலிக்கும் வகையில் கூடியிருந்தவர்களுக்கு இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வீரமரணம் அடைந்த அதிகாரிக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இராணுவ மரியாதையான அடையாள துப்பாக்கி மரியாதை செலுத்தப்பட்டது.
இறுதி வாசிப்பின் சில நிமிடங்களுக்குப் பிறகு, புகழ்மிகு வீரர் அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பலுடன் பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர் இராணுவத் தளபதி அவர்கள் ஜெனரல் ஹமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் பெற்றுக் கொண்ட அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.
இறுதிச் மரியாதையில் மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராணுவத் தளபதிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முப்படை சேவைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தின் மதிப்பிற்குரிய தலைவராக அலங்கரிக்கப்பட்ட அதிகாரியுமான ஒருவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட கட்டளை பகுதி 1 பின்வருமாறு:



