புதிய உபகரண பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவ சேவைப் படையணியின் மேஜர் ஜெனரல் ஈ.எம்.ஜீ.ஏ. அம்பன்பொல அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய உபகரண பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

இந்த நியமனத்திற்கு முன்பு, அவர் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.