இராணுவ படையினர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்த இரண்டு கிராமவாசிகளை வெளியேற்றல்

2025 ஜனவரி 19 அன்று சீரற்ற வானிலை காரணமாக கெபிதிகொல்லாவ, எல்லேவெவவில் இரண்டு கிராமவாசிகள் சிக்கித் தவித்தனர். 5 வது (தொ) கஜபா படையணி படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து உடனடி உதவியை வழங்கினர்.

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 211 வது காலாட் பிரிகேட் தளபதியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.