28th January 2025
11 வது காலாட் படைப்பிரிவின் 641 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீ.கே வருவங்கொடகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான நன்கொடை திட்டத்தை 2025 ஜனவரி 21 ஆம் திகதி தம்புள்ள கிரலகொல்ல ஆரம்ப பாடசாலையில் நடாத்தினர்.
திரு. சுரேப் அவர்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந் நிகழ்வின் போது 100 மாணவர்களுக்கு அத்தியாவசிய எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. 641 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் யூ.ஆர்.ஐ.பி ரணதுங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.