28th May 2025
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ் 2 வது கஜபா படையணி, உலர் உணவு மற்றும் மதிய உணவு பொதிகள் வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தியது.
இந்த நிகழ்வு 2025 மே 25 ஆம் திகதி படையணி வளாகத்தில், சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இத்திட்டம் அப்பிரதேசத்திலுள்ள கர்ப்பிணிகளை ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததுடன், 2 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் நிதியுதவி வழங்கப்பட்டது.
221 வது காலாட் பிரிகேட் தளபதியின் கருத்திற்கமைய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.