‘பாதுகாப்புப் படை (வன்னி) தளபதி சவால் கிண்ண கரப்பந்து – 2025’ போட்டி மன்னாரில் வெற்றிகரமாக நிறைவு

‘பாதுகாப்புப் படை (வன்னி) தளபதி சவால் கிண்ண கரப்பந்து – 2025’ போட்டி ஜூன் 04, 2025 அன்று மன்னார் நகர சபை உள்ளக மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. முதற்கட்ட போட்டிகள் 2025 மே 20 அன்று நடைபெற்றன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களைச் சேர்ந்த அணிகளும், 54 காலாட்படை பிரிவைச் சேர்ந்த இரண்டு அணிகளும் இந்தப் போட்டியில் பங்கேற்றன, இதில் 54 காலாட்படை பிரிவு ‘ஏ’ அணிக்கும் மன்னார் பிரதேச செயலக அணிக்கும் இடையே ஒரு பரபரப்பான போட்டி இடம்பெற்றது. விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக மன்னார் மாவட்ட மகளிர் கரப்பந்து அணிக்கும் இராணுவ மகளிர் கரப்பந்து அணிக்கும் இடையிலான ஒரு கண்காட்சிப் போட்டி, நிகழ்விற்கு மேலும் மதிப்பை சேர்த்தது.

இந்தப் போட்டி ஒரு பரிசளிப்பு விழாவுடன் நிறைவடைந்தது, வெற்றியாளர்களுக்கும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த முயற்சியானது வன்னி பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பி.எஸ்.பி குலதுங்க ஆர்எஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 54 வது காலாட் படைபிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் 541 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.