4th June 2025
இலங்கை பொறியியல் படையணி, மேஜர் ஜெனரல் டி.சி. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் நிறைவு குறிக்கும் வகையில் 2025 மே 29 ஆம் திகதி பிரியாவிடை அளித்தது.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படையணி அணிவகுப்பு மைதானத்தில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியையும் அவரது குடும்பத்தினரையும் வரவேற்றார்.
பின்னர், சிரேஷ்ட அதிகாரி தேநீர் விருந்துபசாரத்தின் போது அனைத்து நிலையினருடனும் கலந்துரையாடினார். பிரியாவிடை நிகழ்வுகள் இரவு உணவுடன் நிறைவடைந்தன. படையணியின் படைத் தளபதி, ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் படையணி மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பைப் பாராட்டி பிரியாவிடை உரை நிகழ்த்தினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, படையணியின் படைத் தளபதி, அனைத்து நிலையினர் மற்றும் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.