களனி ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி பங்கேற்பு

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 12 அன்று களனி புனித ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, களனி ரஜ மகா விஹாரையின் இளைஞர் அமைப்பு, இராணுவத்தினருடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

களனி ரஜமஹா விஹாரையின் தலைமைப் பீடாதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டிய மஹிந்த சங்கரக்கித்த தேரர் நடாத்திய மத அனுஷ்டானங்களில் இராணுவ பதவி நிலை பிரதானி பங்கேற்றார். பின்னர், விகாரை வளாகத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அமைப்பாளர்கள் இணைந்து கொண்டனர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்களும் தானம் மற்றும் வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.