17th May 2026
போர் பிரதேசத்தில் சமீபத்தில் நிறுவப்பட்ட இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலை, தமது புதிய இடத்தை அமைத்த சிறிது காலத்திலேயே, அனைத்து மருத்துவமனை ஊழியர்களின் பங்கேற்புடன் தென் சூடான் ஐ.நா சபை தூதுக்குழு வளாகத்தில் ஒரு தூய்மையாக்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
வளாகத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலைப் பராமரிக்கவும், இத்திட்டம் ஒரு சரியான நேரத்திலும் அவசியமானதாகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும்.
இந்தத் திட்டத்தின் போது, அதிகளவு குப்பைகளும் கழிவுப் பொருட்களும் சேகரிக்கப்பட்டு, முறையான கழிவு முகாமைத்துவ நடைமுறைகளின்படி முறையாக அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், சுகாதார அபாயங்களைக் குறைக்கவும், அனைத்து சுகாதார நிலைமைகளை மேம்படுத்தவும், அடைபட்டிருந்த வடிகால் அமைப்புகள் வெற்றிகரமாகச் சுத்தம் செய்யப்பட்டன.