ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்.சீ.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஓகஸ்ட் 21 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் எச்.சீ.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 1991 ஜனவரி 02 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாடநெறி எண்–35 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1992 ஆகஸ்ட் 29, இரண்டாம் லெப்டினன் நிலையில் கெமுணு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார். அவர் தனது சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு 2024 செப்டம்பர் 30 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார்.

சிரேஷ்ட அதிகாரி 2025 ஓகஸ்ட் 28 ம் திகதி தனது 55 வயதை அடைந்ததும், இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதியாக பதவி வகிக்கின்றார்.

தனது இராணுவ வாழ்க்கையில், அவர் 8 வது கெமுணு ஹேவா படையணியின் குழுத் தளபதியாகவும், 8 வது கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, கெமுணு ஹேவா படையணி தலைமையக பொதுப்பணி நிலை அதிகாரி 3, 11 வது கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 2 (ஒருங்கிணைப்பு), கெமுணு ஹேவா படையணி தலைமையக பணிநிலை அதிகாரி 2 (வளங்கல்), ஹைட்டி ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்படுத்தல் பணியில் இலங்கை படையலகு தளபதி, 19 வது கெமுணு ஹேவா படையணி பிரதி கட்டளை அதிகாரி, 56 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடு), 5 வது கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (உள்நாட்டு பயிற்சி), யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), இராணுவத் தலைமையக ஊடக பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1, 62 வது காலாட் படைப்பிரிவு கேணல் (பொதுப்பணி),682 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவத் தலைமையக ஆராய்ச்சி, கருத்து மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் ஆராய்ச்சி பகுப்பாய்வு கணிப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர், கெமுணு ஹேவா படையணி தலைமையக நிலைய தளபதி ஆகிய முக்கிய நியமனங்களை வகித்துள்ளதுடன் தற்போது 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவிவகிக்கின்றார்.

இலங்கை இராணுவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் வீரம் மிக்க சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு ரண விக்ரம பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவப் பயிற்சியைப் பொறுத்தவரை, மோட்டார் போக்குவரத்து அதிகாரிகள் பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை குறிபார்த்து சுடல் பாடநெறி, சமநிலை பாணி பாடநெறி, படையலகு கணக்கு அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை பாராசூட் பாடநெறி மற்றும் புவியியல் தகவல் அமைப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்த உயர் குறுகிய பாடநெறி (பேராதெனிய பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது) போன்ற உள்நாட்டு இராணுவப் பயிற்சிகளை முடித்துள்ளார்.

அவரது சர்வதேச பயிற்சியில் பங்காளதேசத்தில் இளம் அதிகாரிகளுக்கான காலாட் படை பயிற்சி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை அதிகாரிகள் பயிற்சி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச பாதுகாப்பு முகாமைத்துவ பயிற்சி ஆகியவற்றை பயின்றுள்ளார்.