27th February 2026
இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 2026 பெப்ரவரி 25 அன்று கோனஹேன விசேட அதிரடி படை அதிகாரிகளுடன் இணைந்து ஒரு சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது, கிருலப்பனை பகுதியில் பலபொகுன வீதி சிறுவர் பூங்காவில் 05 கிலோ ஹஷிஷ் மற்றும் ஒரு ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 300 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.