15th May 2026
இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 13 அன்று இராணுவ போர் கருவி தொழிற்சாலைகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ போர் கருவி தொழிற்சாலை தளபதியினால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் ஒரு குழு படம் எடுக்கப்பட்டது.
அன்றைய நிகழ்ச்சி நிரல், இராணுவ போர் கருவி தொழிற்சாலை தளபதி வழங்கிய ஒரு விரிவான விளக்கவுரையுடன் ஆரம்பமாகியதுடன், அந்த விளக்கவுரையில், நிறுவனத்தின் தொழில்நுட்பத் திறன்கள், நடைபெற்று வரும் வளர்ச்சி முயற்சிகள் மற்றும் இராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதில் அடைந்த சாதனைகள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன. அந்த விளக்கவுரையின் போது,எதிர்கால செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஆதரவாக, இராணுவ போர் கருவி தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி வழிகாட்டுதல்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி உற்பத்தி வசதிகளை ஆய்வு செய்ய சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன், அங்கு அவர், இராணுவ போர் கருவி தொழிற்சாலையின் செயற்பாட்டுத் திறன்களுக்கு ஆதரவளிப்பதில் பணியாளர்கள் பேணிவரும் அர்ப்பணிப்பு, தொழில்முறைத் திறன் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பிரதி பதவி நிலை பிரதானி பாராட்டினார்.
புறப்படுவதற்கு முன்பு, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் கனிவுடன் பதிவு செய்தார்.