இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் ஐக்கிய நாடுகள் நடமாடும் பயிற்சி குழுவால் நடாத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை மையமாகக் கொண்ட, பதற்றமான சூழலில் ரோந்து/வாகன அணிவகுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, 2026 மே 15 ஆம் திகதி நிறைவடைந்தது.

2026 ஏப்ரல் 20 முதல் மே 15 வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனம் மற்றும் மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் இரண்டு கட்டங்களாக நடாத்தப்பட்டது. இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 54 பங்கேற்பாளர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் இலங்கைக்கான ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசின் கௌரவ பிரதித் தூதுவர் திருமதி சாரா ஹசல்பர்த் அவர்கள் பிரதம விருந்தினராகவும், பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரதித் தூதுவர் நிறைவுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.